காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையினால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1,40,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரையோரம் உள்ள வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் தேங்கி நிற்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…