ஐஐடி மாணவி ஒருவர் ஆவடி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி அருகே இரயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் தலை மற்றும் முகத்தில் காயத்துடன் உயிரிழந்து கிடப்பதை பார்த்த ரயில்வே பணியாளர்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்தது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகாஶ்ரீ (30) என்பது தெரியவந்துள்ளது.
திருமணமாகாத இவர் டெல்லியில் எம்.டெக், மற்றும் பி.எச்டி பட்டம் பெற்று தற்போது சென்னை அடையாறில் உள்ள ஐஐடி மைய விடுதியில் தங்கி ஐஐடி'யில் மூன்று மாத கால ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார்.
அடையாற்றில் தங்கியிருக்கும் மாணவி மேகா ஸ்ரீ எதற்காக ஆவடி வந்தார்? ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…