Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அவர் ஊழல் செய்தாரா..? வெட்கமாக இல்லையா.? ரெய்டுக்கு எதிராக கொந்தளித்த மகள்...

Bala May 20, 2022 & 12:05 [IST]
அவர் ஊழல் செய்தாரா..? வெட்கமாக இல்லையா.? ரெய்டுக்கு எதிராக கொந்தளித்த மகள்...Representative Image.

Lalu Prasad Yadav:-பீகாரில் லாலு பிரசாத் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பதவிக் காலத்தில் நடந்த ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக சிபிஐ புதிய ஊழல் வழக்கை பதிவு செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பீகாரில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின்  இல்லங்களிலும் பாட்னா, டெல்லி மற்றும் கோபால்கஞ்ச் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.  சிபிஐ நடத்திய சோதனைக்கு எதிராக ஆர்ஜேடி தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சிபிஐ ரெய்டுகளுக்கு பதிலளித்த லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி, ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆர்ஜேடி தலைவரை பயமுறுத்துவதற்காக இந்த ரெய்டுகள் ஒரு சாக்குபோக்கு என்று குற்றம் சாட்டினார். மேலும் ரயில்வே துறையை முதன் முறையாக லாபத்தில் இயக்கியவரிடம், ஊழல் செய்ததாக சிபிஐ ரெய்டு நடத்துவது, பாஜவின் இழிவான செயல் என காட்டமாக தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்