வீடுகளுக்கு சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பியது. இதனையடுத்து பஞ்சாப் தேர்தலில் வென்ற பின் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த 4 ஆண்டுகளாக டெல்லியில் இந்த திட்டத்தினை அமல்படுத்த நாங்கள் போராடி வருகிறோம். அதற்கான ஒவ்வொரு விசயமும் திட்டமிடப்பட்டது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அதனை நிறுத்தி விட்டது என கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று டெல்க்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது, மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீடுகளுக்கு சென்று கொண்டு போய்க் கொடுக்கலாம். மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி திட்டத்தை ரத்து செய்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…