சென்னை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தின் ஆட்சியராக விஜய ராணி இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு, கூட்டுறவு, உணவு நுகர்வோர் துறை இணை கமிஷனராக இருந்த அமிர்தா ஜோதி சென்னையின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து சென்னை வடக்கு மண்டல ஐஜியை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. சென்னை வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், தமிழக அரசு ஆட்சியர் மற்ரும் ஐஜியை இடமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…