தற்போதைய சூழலில் சாதாரண காய்ச்சல் என்றால் கூட பல தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது 1000 கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் இந்த கொரோனா போராட்டத்திற்கு பிறகு பொருளாதாரம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நோயாளிகளிடம் ரூ.1 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஐசியூ, எக்ஸ்-ரே, பிசியோதெரபி போன்றவற்றிற்கும் குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 200 பேர் வரை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால், இங்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் வருபவர்களுக்கும் இலவசமாக உணவும் அளிக்கப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் 1 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைக்கு பல்வேறு தரப்பினர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அனைவருக்கும் மருத்துவத்தை ஒரு சேவையாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருவதாக மருத்துவமனையை நடத்தி வரும் அறக்கட்டளை தலைவர் கங்காதர குப்தா தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற இன்னும் பல மருத்துவமனைகளை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…