செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அச்சரப்பாக்கம் போலீசார் காயமடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட் செய்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சமும்,
படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…