சென்னையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி, கஜபதி தெருவின் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிரோ கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்த வந்த அவர்கள், தீயை அணைத்தனர்.இதனால் தீ அருகில் இருந்த கார்களுகும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் கார் முற்றிலும் சேதமானதால் கார் யாருடையது என கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும், யாரும் காருக்கு உரிமை கோரி வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா அல்லது விஷமிகள் யாரவது தீ வைத்தார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…