நீட் தேர்வு காரணமாக ஓசூர் மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து தற்கொலைகள் நிகழ்வது பெற்றோர்கள் மத்தியில் அதிர்சியையும், அச்சத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அணிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்ப்படுத்தியது. இதனையடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். குறிப்பாக அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக கூட, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க போராடுவோம் என தெரிவித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டான்.
இந்நிலையில் தற்போது ஓசூரை சேர்ந்த மாணவன் முரளி கிருஷ்ணா, எனக்கு நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்னால Neetல நல்ல Mark Score பண்ண முடியாது என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் முரளி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…