கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அடுத்த மாதம் 2 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.
மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேர்வுகள் வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது." எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கேரளாவில் கனமழை காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என கேரள அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…