வங்கிக்குள் துப்பாக்கியுடன் சென்று வங்கி ஊழியர்களை மிரட்டிய சாமியாரால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் சிட்டி யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மூலகுடி கிராமத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர், சீனாவில் மருத்துவம் படிக்கும் தனது மகளுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் லோன் கொடுப்பதற்கு பிணை கேட்டதற்கு, கல்விக்கடனுக்கு பிணை கேட்பாயா என கோபமடைந்துள்ளார்.
இந்நிலையில், அதிருப்தியுடன் இருந்த சாமியார், கையில் துப்பாக்கியுடன் வங்கியில் நுழைந்து ஊழியர்களை மிரட்டியதோடு, சேரில் அமர்ந்து ஹாயாக புகை பிடித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே பேஸ்புக்கில் ளைவாக வெளியிட, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவ ஆரம்பித்தது.
இதையடுத்து சம்பவம் குறித்து நன்னிலம் டிஎஸ்பி இலக்கியாவுக்கு தகவல் போக, போலீசார் சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…