மனைவி, 2 பிள்ளைகளை கொடூரமாக கொன்று ஐ.டி.ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் பிரகாஷ் என்ற ஐடி ஊழியர் மனைவி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி காயத்ரி, மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரிகிருஷ்ணன்(8) ஆகியோரின் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐடி ஊழியர் மனைவி, குழந்தைகளை ரம்பத்தால் அறுத்து கொலை செய்து தானும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…