தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் இரு தடங்களிலும் நேற்று தாமதமாக இயங்கி வந்தது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் கோளாறு சரி செய்யப்பட்ட உடன் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.இந்நிலையில், இன்று (25ம் தேதி) அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இயங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வேலைக்குச் செல்பவர்கள் நிம்மதியில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…