சென்னையில்; நடந்து சென்றவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு 5 வது தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற ஆதி சுரேஷ் ந்பவர், மவுண்ட் ரோடு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறது. இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், புருஷோத்தமன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து இவர் புளியந்தோப்பு பகுதியில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இதில் தலையில் பலத்த காடமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலையே பரிதாபமாக பலியானர். தகவலறிந்து விரைந்த வந்த காவல்துறையினர், சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடி வரும் நிலையில், இது முன் விரோதம் காரணமாக நடந்த கொலையா..? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…