ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக சேர நடிகர் சூர்யா உள்பட 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி குழு இன்று வெளியிட்டது. அதில், தமிழ் நடிகர்-தயாரிப்பாளர் சூர்யா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்-எழுத்தாளர் ரீமா காக்டி, பாலிவுட் நடிகை கஜோலுக்கு உள்பட 397 பேருக்கு அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினர்களாக சேரஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது . அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆண்டுதோறும் ஆஸ்கார் விருதுகளை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த ஆண்டு அழைப்பிதழைப் பெற்ற மற்ற இந்தியர்களில் ஆவணப்படத் தயாரிப்பாளர்களான சுஷ்மித் கோஷ் மற்றும் ரிந்து தாமஸ் ஆகியோர் அடங்குவர். அவர்களின் திரைப்படமான 'ரைட்டிங் வித் ஃபயர்' இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்ட முதல் தமிழ் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…