சென்னைவாசிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 306 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா மேலும் பரவுவதை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…