சென்னையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவை அடுத்து போலீசார் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாலை விபத்துகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சாலை விதிகளையும் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தி அமைத்தது. இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிவதில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இருசக்கர வாகங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த திட்டம் நேற்ரு முதல் அமலுக்கு வந்த நிலையில், இதற்கென போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓடியதாக நேற்று மட்டும் 3,926 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…