சென்னை: கோயம்பேட்டில் 11ம் வகுப்பு மாணவன் அந்தோணி தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த அந்தோணி தினேஷ் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினேஷை அவரது பெற்றோர் அடிக்கடி திட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலமாக தூக்கில் தொங்கிய மாணவனை பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…