சென்னையில் பல்லாவரம் ஏரி அருகே திடீரென கரும்புகை கிளம்பியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை அருகே உள்ள ஏரியின் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும் புகை வெளியாகி வருகிறது.
இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கிறனர். பூமிக்கடியில் புதைவட கேபிள் தீப்பிடித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஏரியில் இருந்து கரும்புகை வெளியாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். இந்த புகை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…