செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறுவதால் போக்குவரத்துனெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலில், சென்னை மாநிலக் கல்லூரி முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ராஜா முத்தையா சாலை ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டத்தினை இதற்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என செம்ன்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்வோர் சற்று முன்பாகவே செல்லவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…