சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரனமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், அசோக் நகர், அண்ணா நகர், வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக சாலையோரங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன் ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…