செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்க்ல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? என்றும், பல நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச நிகழ்வை மத்திய அரசுடன் இணைந்து நடத்த வேண்டுமெனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்றைய நாளிதழில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…