Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கக் கடத்தல் ராணியின் பகீர் வாக்குமூலம்….! முதல்வரின் பையில் கட்டுகட்டாகப் பணம்…!

Gowthami Subramani June 08, 2022 & 11:00 [IST]
தங்கக் கடத்தல் ராணியின் பகீர் வாக்குமூலம்….! முதல்வரின் பையில் கட்டுகட்டாகப் பணம்…!Representative Image.

தங்கக் கடத்தலில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக, தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2020 ஆண்டு, தங்கம் கடத்திய வழக்கில் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரியாக விளங்கிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். தற்போது, இந்த வழக்கில் ஜாமில் உள்ளார். இதனையடுத்து, இவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளாதாகக் கூறி, ரகசிய வாக்குமூலம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கேரளா எர்ணாகுளம் பகுதியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்து, அனைத்தையும் கூற முடியாது என்றும், கடந்த 2016-ல் துபாய் சென்ற முதல்வர் பினராயி விஜயனுக்கு இதில் தொடர்பு உள்ளதாகக் கூறி, பல்வேறு சுவாரஸ்யமான வாக்குமூலத்தை அளித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை