ஸ்ரீமதியின் தாய் முதல்வர் ஸ்டாலினிடம் போனில் பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் வீட்டிற்கு நேரில் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஸ்ரீமதிக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிடம் ஸ்ரீமதியின் தாயை பேச வைத்தார். ஸ்ரீமதியின் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தார்" இதனையடுத்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம், உரியவர்களுக்கு தண்டனை கிடைக்கவே அரசு பாடுபடுகிறது எனக் கூறியுள்ளார்.
மேலும், எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம் என்று முதல்வர் கூறியதாக ஸ்ரீமதியின் தாய் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…