போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்று தமிழகம் உலக சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் வருடந்தோறும், ஆகஸ்ட் 11ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு குறும்படத்தையும் முதல்வர் வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரிகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்று சாதனை படைத்துள்ளனர். இதனை பாரட்டும் வகையில், ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு ரெக்கார்ட் யூனியன் நிர்வாகிகள் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…