குழந்தை நட்சத்திரங்களுக்கான வரைவு வழிகாட்டுதலை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் படத் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும், கேலிக்கு ஆளாகும் பாத்திரத்தில் குழந்தைகள் நடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், 6 மணி நேரத்திற்கு மேல் குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும்,
வழிகாட்டுதல்களை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…