Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கையை மீறி வரும் சீன உளவு கப்பல் :- என்ன செய்யப்போகிறது இந்தியா..?

Bala August 10, 2022 & 09:46 [IST]
இலங்கையை மீறி வரும் சீன உளவு கப்பல் :- என்ன செய்யப்போகிறது இந்தியா..?Representative Image.

உளவு கப்பல் வருகையை ரத்து செய்யுமாறு இலங்கை அரசு கூறிய பின்னரு , சீனா உளவு கப்பல் இலங்கையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் சக்தி வாய்ந்த யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் இலங்கையின் அம்பந்த்தோட்ட துறைமுகத்திற்கு வரவுள்ளதாகவும், அங்கு ஒரு வார காலம் அவை ஆய்வு பணிகளில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சீனாவின் சக்தி வாய்ந்த இந்த உளவு கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், இந்த கப்பல் மூலம் சுமார் 750 கி.மீ தூரம் வரை துல்லியமாக கண்காணிக்கக்கூடியது என்றும், இதனால் தமிழ்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம், உளவு வருகையை நிறுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. அதனைதொடர்ந்து இலங்கையில் உள்ள சீனா தூதரகத்திற்கு இலங்கை அரசு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் சீனாவின் யுவான் 5 உளவு கப்பல் வருகையை நிறுத்துமாறு கேட்டுகொண்டது. ஆனால் இலங்கையின் கடித்ததை பொருட்படுத்தாமல் உளவு கப்பல் இலங்கையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அவை, அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு, இந்திய நேரப்படி நாளை காலை 9:30 மணிக்கு, அந்த கப்பல் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்