ரஷ்யா மற்றும் இந்தியா, பெலாரஸ் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுடனான கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ராணுவப்பயிற்சியில் சீனாவும் பங்கேற்கவுள்ளதாகவும், இவை தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலைகளுடன் தொடர்பில்லாதது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த பயிற்சிகள் தொடர்பாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவை வருடந்தோறும் நடைபெறும் பயிற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில், பங்கேற்கும் நாடுகளின் இராணுவங்களுடன் நடைமுறை மற்றும் நட்புரீதியான ஒத்துழைப்பை ஆழமாக்குவது, பங்கேற்கும் தரப்பினரிடையே மூலோபாய ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்துவது மற்றும் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் திறனை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…