Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லையில் சீன ஊடுருவலா..? வெளியான பகீர் தகவல்..!

Bala July 18, 2022 & 19:19 [IST]
எல்லையில் சீன ஊடுருவலா..? வெளியான பகீர் தகவல்..!Representative Image.

கிழக்கு லடாக்கில் ராணுவ நடவடிக்கையை குறைக்குமாறு இந்தியா மீண்டும் சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலில், கிழக்கு லடாக்கில் ராணுவ நடவடிக்கையை குறைக்குமாறு இந்தியா மீண்டும் சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும், சீனாவுடனான இந்த நெருக்கடி காரணமாக, லடாக்கில் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியாவும் வலுவாக்கியுள்ளது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீன ராணுவம் இந்திய பகுதிகளை நோக்கி முன்னேற முடிவு செய்தால், நாமும் அதையே செய்வோம் என்றும் எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு நிலையையும் எதிர்கொள்ள இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், இருதரப்பு உறவுகள் முற்றிலும் பாதிக்கப்படும், என மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எல்லையில் சீனா ஊடுருவல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்