சூறையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வண்முறையில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள், பள்ளி கட்டடங்களை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், சூறையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்றும், தீக்கிரையான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தொடர்ந்து படிக்கவும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…