தமிழகத்தில் பண்டிகை காலம் வரும் போது, முன்னதாகவே பேருந்துகளை முன்பதிவு செய்து கொள்வர். அந்த வகையில் வரும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துக்கான கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பண்டிகைக் காலங்கள் வரும் போது, இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, முன்பதிவு செய்து கொள்வர். இந்த சமயத்தில், வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதன் படி, சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக 1000 ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது இரண்டாயிரம் ரூபாய் முதல் 3100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதே போல, கோவைக்கு 2,500ரூ கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில் அதிகபட்சமாக 3,200 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…