கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (19). இவர் கடலூர் செம் மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த தனலட்சுமி யாருக்கும் தெரியாமல் கழிப்பறைக்கு சென்று துப்பட்டாவல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக்கண்ட சக மாணவிகள் அலறி சத்தம் போட்டுள்ளனர்.
பின்னர் தகலறிந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது பேக்கை சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளது என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…