நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தப் பகுதியில் 3வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஏற்கெனவே 2 பேர் இறந்துள்ள நிலையில் இன்று (17ம் தேதி) ஒருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளார். பாறைகளுக்கிடையில் சிக்கியுள்ள மேலும் 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்ந்லையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். தமிழக அரசு சார்பாக ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பாக ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…