அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 40 மாணவர்களை பரிசோதனை செய்ததில், இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுப்பதாக் பொதுமக்கள் கவனமுடன் இருக்கும் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…