நடிகை சமந்தா படப்பிடிப்பின் போது ஏற்ப்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவராகொண்ட மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் குஷி படம் வெளியாகவுள்ளது. இந்த படகாட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சண்டைக் காட்சியின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் நடிகை சமந்தாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது முதுகில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. மேலும், விபத்து காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்ட அனைவரும் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையை அடுத்த சமந்த நலமுடன் இருப்பதாகவும் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தியை கேட்ட சமந்தா வெறியர்கள் கவலையடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…