திருச்செந்தூர் முருகன் கோயிலில் போலீசாரை அர்ச்சகர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் அதனால் ஏற்ப்படும் கூட்டத்தை பயன்படுத்தி சில அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு குறுக்கு வழிகளில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்து வருகின்றனர். இதை போலீசார் தடுக்க முயற்சித்த போது அர்ச்சகர்கள் ஒன்றாக சேர்ந்து போலீசை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு அர்ச்சகர் அழைத்துச் செல்லாத காரணத்தால் அர்ச்சகரிடம் பக்தர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை அவர் திரும்பப்பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…