ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரசார் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் 7 பேருக்கு தண்டனை கொடுத்த உச்சநீதிமன்றமே தற்போது சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் அவர்கள் கொலைகாரர்கள், நிரபராதிகள் அல்ல என கூறினார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை (19ம் தேதி) காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும். கட்சியினர் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…