தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன் படி நேற்றைய பாதிப்பு மட்டும் 2 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா..? என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் விழிப்புனர்வுடன் இருக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…