கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கிருமி நாசினி வைக்கவும், பரிசோதனையை அதிகரிக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…