குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் அதனை ஒட்டிய மேற்கு தொடர்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழை காரணமாகமழையால் குற்றாலம் மெயின், பழைய குற்றாலம், ஐந்தருயில் நீர்வரத்து அதிகரித்து அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியது. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனால் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழலாம் என வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைத்துடன் அருவிகளில் பாய்ந்தோடிய ஆர்ப்பரித்து கொட்டிய நீரை வேடிக்கை மட்டுமே பார்த்து சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…