தென்கொரியாவில் இருந்து தங்கள் எல்லைக்குள் வரும் பலூன்கள் மூலம் தான் கொரோனா பரவல் தொடங்கியதாக்க வடகொரிய குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தென்கிழக்கு எல்லை நகரான இபோ அருகே தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும், அவர்கள் தென்கொரியாவில் இருந்து எல்லை தாண்டி பறக்கவிடப்படும் பலூன்களை தொட்ட பின் தான் அவர்களுக்கு கொரோனா பரவல் தொடங்கியதாகவும், அவர்களில் சிலர் அறிகுறிகடன், தலைநகருக்கு வந்தவுடன் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எல்லைக்கு அப்பால் இருந்து வரும் எந்த பொருளையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்கொரியாவில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன்னு எதிரான வாசகங்களுடன் பலூன்கள் பறக்கவிடப்பட்டு வருவதற்கு வடகொரிய கண்டனம் தெரிவித்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…