Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை தேசிய துக்க தினமாக அனுசரிப்பு:- பிரதமர் மோடி அறிவிப்பு..!

Bala July 08, 2022 & 19:57 [IST]
நாளை தேசிய துக்க தினமாக  அனுசரிப்பு:- பிரதமர் மோடி அறிவிப்பு..!Representative Image.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி, ''எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபே மறைவு வார்த்தையால் விவரிக்க முடியாத வருத்தத்தை கொடுத்துள்ளது. அவர் ஒரு சிறந்த உலக தலைவர்; சிறந்த நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற ஷின்சோ அபே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்'' என்று கூறியுள்ளார்.

ஷின்சோ அபேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த கடினமான நேரத்தில் ஜப்பானின் துயரத்தில் இந்தியா பங்கு கொள்வதாகவும் தெரிவித்தார். அவரின் மறைவையடுத்து, நாளைய தினம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்