உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் படை வீரர்களுக்கு மரண தண்டனை என ரஷ்யா கூறுவது பயங்கரவாதம் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் வீரர்களுடன் இணைந்து வெளிநாட்டு கூலிப்படைகளும் சண்டையிட்டு வருகின்றன. இந்த கூலிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த வீரர்களும் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர்களை சிறைபிடித்த ரஷ்யா, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது. அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா வீரர்கள் என்பதற்கு அல்லாமல் கூலிப்படை என்ற அடிப்படையிலேயே அந்த வீரர்களை கைது செய்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…