சென்னையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் தள்ளி கல்லூரி மாணவியை கொலை செய்தவனை ரயிலில் தள்ளிவிட்டு கொல்லும்படி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ட்வீட் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த சத்ய ப்ரியா என்ற கல்லூரி மாணவியை நேற்று சதீஷ் என்பவன் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொடூரமாக கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுவாதி, சுவேதா, சத்யா: சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் கொலைச்சம்பவங்கள்.. குற்றமும் பின்னணியும்..
இதையடுத்து போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளி சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, மாணவியின் மரணம் குறித்து அறிந்த அவரது தந்தை அதிர்ச்சியில் உயிரை விட்டது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்?" என கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…