கடந்த சில நாட்களாகவே தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேராள் போன்ற இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது தக்காளியின் விலை 'கிடுகிடு' வென உயர்ந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 க்கு விற்பனையான நிலையில், தற்போது 3 மடங்கு அதிகரித்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…