ஆடி மாத அமாவசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுந்தரமாகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆடி மாத அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஜூலை 25ம் தேதி முதல் ஜுலை 29ம் தேதி வரை 5 நாட்கள் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், காலை 5 மணி மதியம் 3 மணி வரை மட்டுமே மலையேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 5 நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் பயண அனுமதி தடை செய்யப்படும். இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…