Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்..ஆட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை!!

Sekar September 06, 2022 & 14:30 [IST]
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்..ஆட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை!!Representative Image.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை உடனே திறக்க வேண்டும் என பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அதைத் தொடர்ந்து போராட்டமும் வன்முறையும் வெடித்தது.

இந்த வன்முறையில் பள்ளியின் சொத்துக்கள் சேதமடைந்த நிலையில், பள்ளியில் பயின்று வந்த மாணவ மாணவியருக்கு ஆன்லைன் முறையிலும், குறிப்பிட்ட சில வகுப்புகளை அருகிலுள்ள வேறு பள்ளிகளின் மூலமும் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், பள்ளியை மீண்டும் திறந்து முழுநேர வகுப்புகளை நடத்த வேண்டும் என அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் இன்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

பெற்றோர் முற்றுகையின்போது ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், சுமார் மூன்று மணியளவில் இந்த விவகாரம் குறித்து பெற்றோரிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்