கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு மாவட்ட காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக, நீதிகேட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 67க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானது. பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி, காவல்துறையினரின் வாகனங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
கலவரக்காரர்கள் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி கலவரம் குறித்து வதந்தி பரப்பியவர்களின் விவரங்களை அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு தமிழக காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…