தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலைக்காக வந்தவர்கள் தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இதனால் தீபாவளி சமயத்தில் பேருந்து, ரயில் என அனைத்திலும் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு திறக்கட்ட சில நிமிடங்களிலேயே முடிவடைந்து விட்ட நிலையில், பலரும் பேருந்துகளில் செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு 21, 22 மற்றும் 23 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இதுவரை 1.10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…