தேர்தல் இலவசங்களை அறிவிக்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கில், தங்களையும் ஒரு தரப்பாக இணைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார்.
நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் தேவை என்பது வெவ்வேறாக உள்ளது, எனவே ஒரே திட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது; எனவே திட்டங்கள் அனைத்தையும் இலவசம் என்ற சொல்லுக்குள் வகைப்படுத்த முடியாது, அது தவறான கூற்று ஆகும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…